காவலர்களுக்கு ஒருநாள் விடுமுறை! மக்கள் நீதி மய்யத்தின் நீண்டநாள் கோரிக்கை- கமல்ஹாசன்

 

காவலர்களுக்கு ஒருநாள் விடுமுறை! மக்கள் நீதி மய்யத்தின் நீண்டநாள் கோரிக்கை- கமல்ஹாசன்

மகிழ்ச்சியான பணிச்சூழலில் தமிழக காவல்துறை இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழவேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காவலர்களுக்கு ஒருநாள் விடுமுறை! மக்கள் நீதி மய்யத்தின் நீண்டநாள் கோரிக்கை- கமல்ஹாசன்

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கவேண்டும். காவலர்களின் பிறந்தநாள், திருமண நாள் அவர்களின் குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் வழங்க விடுப்பு வேண்டும் என அனைத்து மாநகரப் காவல்ப் ஆணையாளர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். காவலர்கள் தங்கள் உடல்நலனை பேணிகாக்க, குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவே வார விடுப்பு அளிக்கப்படுவதாகவும், வார ஓய்வு நாளன்று அவரவர் விருப்பத்துடன் பணியில் இருந்தால் மிகை நேர ஊதிய வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கதில், “காவலர்களுக்கு வாரவிடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவுகள் நம்பிக்கையளிக்கின்றன. மகிழ்ச்சியான பணிச்சூழலில் தமிழக காவல்துறை இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.