அன்னைய்யா உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்… எஸ்.பி.பியை அழைக்கும் கமல்ஹாசன்
50 ஆண்டு கால திரையுலக இசை பயணம் மூலம் கோடான கோடி ரசிகர்களை தன்வசம் கட்டிபோட்டு வைத்திருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள அவருக்கு கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது.
நேற்று சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவக்குழுவுடன் ஆலோசித்தார். தற்போது எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் நேற்று சரண் தெரிவித்துள்ளார்.
அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.
உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா 🙏— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2020
இந்நிலையில் எஸ்.பி.பி நலம் பெற வேண்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.
உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா ” எனக் குறிப்பிட்டுள்ளார்.