‘தேர்தல் பணி தீவிரம்’ மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார் கமல்ஹாசன்!

 

‘தேர்தல் பணி தீவிரம்’ மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார் கமல்ஹாசன்!

தேர்தல் பணிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் நவ.2, 3 தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 16ம் தேதி அக்கட்சி கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், 40 மட்டுமே கலந்து கொண்டனர். அதன் முடிவில், ஒருமித்த கருத்துக்களுடைய கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பு வெளியானது.

‘தேர்தல் பணி தீவிரம்’ மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார் கமல்ஹாசன்!

இந்த நிலையில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வரும் நவ.2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகம் முழுவதிலும் உள்ள கட்சி நிர்வாகிகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்திக்கவிருக்கிறார். இந்த கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தின் முடிவில், தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.