தமிழக அமைச்சர்களை கண்டித்து போஸ்டர் ஒட்டிய கமல் ரசிகர்கள்! – மதுரையில் பரபரப்பு
மக்கள் நீதி மய்யம் தலைவரை தமிழக அமைச்சர் ஒருமையில் விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று மதுரையில் கமல் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை என்றாலே போஸ்டர், பேனருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களைக் காணலாம். சின்ன சின்ன விஷயத்துக்கு கூட போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி மகிழ்வது மதுரையின் கலாச்சாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கமல் பற்றி அவதூறாக பேட்டி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கமல்ஹாசன் நடிப்பில் வேண்டுமானால் பல்கலைக் கழகமாக இருக்கலாம் அரசியலில் அவர் எல்.கே.ஜி என்று செல்லூர் ராஜூ கூறியிருந்தார். பேட்டியின் போது அவர் கமலை ஒருமையில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இது கமல் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
💥 நம்மவர் என்றும் எங்கள் வாழ்வின் முதல் படி 💥நம்மவரை ஒருமையில் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். 😡 தமிழக அமைச்சர்களே!! எங்கள் நம்மவர் கோட்டை மதுரையில் தமிழக அமைச்சர் அவர்களை கண்டித்து கண்டனம் போஸ்டர் என்றும் நம்மவர் வழியில்: கமல் பா.சிவமணி தென் மேற்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் pic.twitter.com/Oe39g5YJCR
— பா.சிவமணி தென்மேற்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் மதுரை (@podakonkako) August 18, 2020
மதுரை முழுக்க “தமிழக அமைச்சர்களே, நம்மவரை ஒருமையில்
பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். நம்மவர் என்றும் எங்கள் வாழ்வின் முதற்படி. அமைச்சர்களே இந்த தவறு நீடித்தால் கொடுப்போம் பதிலடி” என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.