கள்ளக்குறிச்சி- தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

 

கள்ளக்குறிச்சி- தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் செங்குந்தர் நகரை சேர்ந்த சுரேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரது இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்த சில நாட்களில் மாயமாகின. இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருசக்கர வாகனங்கள் திருடுபோன நிலையில், எஸ்.பி., ஜியா-வுல்-ஹக் உத்தரவின்

கள்ளக்குறிச்சி- தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

பேரில் போலிசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினார். இந்நிலையில், கனியாமூர் கைக்காட்டி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, அவர் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறியதால் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்

கள்ளக்குறிச்சி- தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

உளுத்தூர்பேட்டை எறையூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பதும், சின்னசேலம் பகுதியில் 4 இருசக்கர வாகனம் உட்பட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 இருசக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.