“வட சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு எலும்பு முறிவு இல்லை” – தாயார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

 

“வட சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு எலும்பு முறிவு இல்லை” – தாயார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

வட சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர் காவல்துறையினர் பிடியில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் அவரை கடந்த ஜூன் 12ஆம் தேதி விழுப்புரம் அருகே காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் கைது செய்தபோது காக்கா தோப்பு பாலாஜி காவல்துறையினரை தாக்கி தப்பிக்க நினைத்து குதித்த போது அவரின் கை மற்றும் காலில் உள்ள எலும்புகள் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

“வட சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு எலும்பு முறிவு இல்லை” – தாயார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

பின்னர் பாலாஜியை கைது செய்த காவல்துறையினர் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஜூன் 13ஆம் தேதி அனுமதித்தனர். பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி அவரது தாய் கண்மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

“வட சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு எலும்பு முறிவு இல்லை” – தாயார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் காக்கா தோப்பு பாலாஜியின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அவருக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை எனவும் உடலில் ஏற்பட்ட இருந்த காயங்களுக்காகவும், கொரோனா சிகிச்சைக்காகவும் 10 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

“வட சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு எலும்பு முறிவு இல்லை” – தாயார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

பின்னர் ஜூன் 23 ஆம் தேதி மருத்துவ சிகிச்சை முடிந்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது பாலாஜி உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி நிர்மல்குமார், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, பாலாஜிக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டுள்ளதால் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.