சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்ஜிஆரை பற்றி பேச அருகதை இல்லை- கடம்பூர் ராஜூ

 

சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்ஜிஆரை பற்றி பேச அருகதை இல்லை- கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் செய்தியாளரிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “நான் எனது சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார், நடிகர் கமல்ஹாசன் வெளியிட தயாரா?. மனசாட்சிபடி நடிகர் கமலஹாசன் தனது ஊதியம் குறித்து கணக்கு சொல்லட்டும், நாங்களும் சொல்ல தயராக இருக்கிறோம். சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்.ஜி.ஆர் பற்றி பேச அருகதை இல்லை. எம்.ஜிஆரை பழித்து பேசிய எவனையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை. எம்.ஜி.ஆரை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்.ஜி.ஆர் பற்றி பேச அருகதை இல்லை. தரத்துடன் பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். நாட்டில் இருக்கிறதை காட்டி கொள்வதற்காக, ரகளை பண்ணுவதற்காக வாய்க்கு வந்தபடி பேசுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது முறையாக இருக்காது.

சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்ஜிஆரை பற்றி பேச அருகதை இல்லை- கடம்பூர் ராஜூ

அண்ணாமலை ஐபிஎஸ் படித்தாரா? இல்லையா? என்று தெரியவில்லை. மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ 6 ஆயிரம் வழங்குகிறார்கள், அரசு திட்டங்களுக்கு அரசு நிதியில் இருந்து தான் கொடுக்க வேண்டும். இதை தவறாக சித்தரிக்கும் அண்ணாமலை என்ன அளவுகோலில் பேசுகிறார் என்று தெரியவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்திலும் திரைத்துரையினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து உள்ளது. திரைத்துரையினர் வைத்த கோரிக்கைளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்கள் இடம் பெறுவதற்கு தமிழக அரசு உதவி செய்துள்ளது. ஹாலிவுட் அளவிற்கு தமிழ் திரைப்படத்துறை வளர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்.