நள்ளிரவில் எரிக்கப்பட்ட நீதி! ஆம்பூரில் ஆர்ப்பாட்டம்

 

நள்ளிரவில் எரிக்கப்பட்ட நீதி! ஆம்பூரில் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மனிஷா மற்றும் திண்டுக்கல் கலைவாணி ஆகியோர்களுக்கு நீதி கேட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நள்ளிரவில் எரிக்கப்பட்ட நீதி! ஆம்பூரில் ஆர்ப்பாட்டம்

நள்ளிரவில் எரிக்கப்பட்ட நீதி என்றும், உ.பி.யோகி சாமியின் குண்டாஸ் ஆட்சியை நீக்கு என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் கட்சியினர்20 பேரை ஆம்பூர் நகர காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.