சூப்பர் ஸ்டாரின் சவாலை ஏற்ற இளையதளபதி!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு விடுத்த சவாலை ஏற்பாரா இளையதளபதி விஜய்? என்றுதான் வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக ரசிகர்கள் பலரும் படு தீவிரமாக விவாதித்துவந்தனர். இந்நிலையில் இன்று மகேஷ்பாபு சவாலை ஏற்று, செடியையும் நட்டு வைத்துள்ளார் நடிகர் விஜய்.
#GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்து செல்ல வேண்டும். தெலங்கானா சட்டமன்ற அமைச்சர் சந்தோஷ்தான் இந்த சேலஞ்சைதொடங்கி வைத்தவர்.
நடிகை சமந்தாவிடம் தொடங்கிய இந்த சேலஞ்சானது, தொடர்கிறது. மகேஷ் பாபு இந்த சேலஞ்சை ஏற்றுகொண்டு, அதில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் நடிகர் விஜய்யை சேலஞ்ச் செய்திருந்தார்.
சமூக ஊடகங்களில் விஜய் ஆக்டிவான நபர் இல்லை. அதனால் அவர் மகேஷ் பாபு விட்டுள்ள சவாலை ஏற்பாரா, என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில், விஜய் சவாலை ஏற்று செய்திருக்கும் புகைப்படங்களை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
’இது உனக்காக’ என்று குறிப்பிட்டு, ’’பசுமை இந்தியாவை உருவாக்குவோம்’’ என்று தெரிவித்துள்ளார் விஜய்.
This is for you @urstrulyMahesh garu. Here’s to a Greener India and Good health. Thank you #StaySafe pic.twitter.com/1mRYknFDwA
— Vijay (@actorvijay) August 11, 2020