சாத்தான்குள விவகாரம்: 5 போலீசாருக்கு ஜூலை 30 வரை காவல் நீட்டிப்பு!

 

சாத்தான்குள விவகாரம்: 5 போலீசாருக்கு ஜூலை 30 வரை காவல் நீட்டிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குள விவகாரம்: 5 போலீசாருக்கு ஜூலை 30 வரை காவல் நீட்டிப்பு!

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் கையில் எடுத்தனர். அதன் முதற்கட்டமாக கைதான 5 காவலர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு சிபிஐ அனுமதி கேட்டது. அதற்கு நீதிபதிகள் ஒப்புக் கொண்ட நிலையில், 5 காவலர்களிடையேயும் தனித்தனியாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக வாக்குமூலம் பெற்றனர்.

சிபிஐக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றோடு நிறைவடைந்த நிலையில் அந்த 5 காவலர்களும் இன்று மீண்டும் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த நிலையில், சாத்தான்குள வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் ஜூலை 30 வரை நீதிமன்றக் காவலை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன் படி, தற்போது அவர்கள் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதில் காவலர் முத்துராஜூக்கு மட்டும் ஒரு நாள் சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.