சரியான நேரத்தில் முடிவு எடுத்து கொரோனாவிலிருந்து 130 கோடி மக்கள் கொண்ட நாட்டை மோடி காப்பாற்றினார்.. நட்டா

 

சரியான நேரத்தில் முடிவு எடுத்து கொரோனாவிலிருந்து 130 கோடி மக்கள் கொண்ட நாட்டை மோடி காப்பாற்றினார்.. நட்டா

சரியான நேரத்தில் முடிவெடுப்பதன் மூலம் கோவிட்-19லிருந்து 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டை காப்பாற்றினார் என்று பிரதமர் மோடியை ஜே.பி. நட்டா பாராட்டி பேசினார்.

பீகாரில் நேற்றுடன் 3வது மற்றும் இறுதி கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்தார். தர்பாங்கவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது:

சரியான நேரத்தில் முடிவு எடுத்து கொரோனாவிலிருந்து 130 கோடி மக்கள் கொண்ட நாட்டை மோடி காப்பாற்றினார்.. நட்டா
ஜே.பி. நட்டா

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. கோவிட்-19ஐ சரியாக கையாளவில்லை என்று டொனால்ட் டிரம்ப் எதிராக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் மோடி ஜி சரியான நேரத்தில் முடிவெடுப்பதன் மூலம் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டை காப்பாற்றினார்.

சரியான நேரத்தில் முடிவு எடுத்து கொரோனாவிலிருந்து 130 கோடி மக்கள் கொண்ட நாட்டை மோடி காப்பாற்றினார்.. நட்டா
அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஒருபுறம் வளர்ச்சி, கல்வி மேம்படுத்துதல், புதிய கல்லூரிகள் திறப்பு, சாலைகள் அமைத்தல், சட்டம் மற்றும் ஒழுங்கை மேம்படுத்துபவர்களும், மறுபுறம் சட்டத்தை மீறுபவர்களும், வளர்ச்சியை நிறுத்துபவர்களும் உள்ளனர். உங்கள் தலைவிதியை நீங்களே தீர்மானியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.