மீண்டும் தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா!

 

மீண்டும் தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பாஜக தலைவர்கள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். அண்மையில் சென்னை வந்திருந்த அமித்ஷா, அரசு விழாவில் பங்கேற்று தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி படுத்திவிட்டுச் சென்றார். அதன்பின் தொகுதி பங்கீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அமித்ஷா மீண்டும் சென்னை வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவரது பயணம் தடைபட்டதாக தமிழக பாஜக தலைமை அறிவித்தது.

மீண்டும் தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா!

இதைத் தொடர்ந்து துக்ளக் வார இதழ் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வந்தார். அப்போது பாஜக சார்பில் நடத்தப்படும் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியிலும் பங்கேற்று சென்றார்.

கடந்த 14 ஆம் தேதிதான் தமிழகத்திற்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்ற பாஜக தேசிய தலைவர் நட்டா மீண்டும் தமிழகம் வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 30ம் தேதி மதுரை வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் ஜே.பி. நட்டா, 234 தொகுதி பாஜக அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.