ஆபாசமாக, அறுவெறுப்பாக நடந்துகொண்ட சுப்பையாவை நீக்க வேண்டும்! எம்.பி ஜோதிமணி மத்திய அரசுக்கு கடிதம்!

 

ஆபாசமாக, அறுவெறுப்பாக நடந்துகொண்ட சுப்பையாவை நீக்க வேண்டும்! எம்.பி ஜோதிமணி மத்திய அரசுக்கு கடிதம்!

பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவரும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் சென்னையில் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்மணியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். அதாவது கணவனை இழந்த 52 வயதான அப்பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தும், குப்பைகளை கொட்டியும் உள்ளார்.

ஆபாசமாக, அறுவெறுப்பாக நடந்துகொண்ட சுப்பையாவை நீக்க வேண்டும்! எம்.பி ஜோதிமணி மத்திய அரசுக்கு கடிதம்!

இது குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுத்ததையடுத்து சுப்பையா மீது வழக்குப்பதிய பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார். அதில் ஒரு பெண்வீட்டின் முன் சிறுநீர்கழித்து அவரிடம் ஆபாசமாக, அறுவெறுப்பாக நடந்துகொண்ட பிஜேபியின் சண்முகம் சுப்பையாவை உடனடியாக மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.