முகேஷ் அம்பானியின் அட்சயபாத்திரமாக மாறிய ஜியோ… ஆறே வாரத்தில் ஜியோ பங்கு விற்பனை வாயிலாக ரூ.92,202 கோடி திரட்டிய ரிலையன்ஸ்..

 

முகேஷ் அம்பானியின் அட்சயபாத்திரமாக மாறிய ஜியோ… ஆறே வாரத்தில் ஜியோ பங்கு விற்பனை வாயிலாக ரூ.92,202 கோடி திரட்டிய ரிலையன்ஸ்..

முகேஷ் அம்பானி ஜியோவின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுமார் ரூ.1.61 லட்சம் கோடி நிகர கடனை அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். முதலில் கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43,547 கோடிக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து சில்வர் லேக் நிறுவனம் (ரூ.5,666 கோடிக்கு 1.15 சதவீத பங்குகள்), தனியார் முதலீட்டு நிறுவனமான விஸ்தா (ரூ.11,367 கோடிக்கு 2.32 சதவீத பங்குகள்), ஜெனரல் அட்லாண்டிக் (ரூ.6,598 கோடிக்கு 1.34 சதவீத பங்குகள்), கே.கே.ஆர். நிறுவனம் (ரூ.11,367 கோடிக்கு 2.32 சதவீத பங்குகள்) ஆகியவை ஜியோவில் முதலீடு செய்தன.

முகேஷ் அம்பானியின் அட்சயபாத்திரமாக மாறிய ஜியோ… ஆறே வாரத்தில் ஜியோ பங்கு விற்பனை வாயிலாக ரூ.92,202 கோடி திரட்டிய ரிலையன்ஸ்..

கடந்த சில தினங்களுக்கு முன்பு அபுதாபியை சேர்ந்த முபதாலா முதலீட்டு நிறுவனம் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில் சுமார் ரூ.9,093.6 கோடி முதலீடு செய்துள்ளது. அதாவது ஜியோவின் 1.85 சதவீத பங்குகளை ரூ.9,093.6 கோடிக்கு முபதாலா நிறுவனம் வாங்கியது. இந்த சூழ்நிலையில், தனியார் முதலீட்டு நிறுவனமான சில்வர் ஜியோவில் மேலும் ரூ.4,546.80 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது. இதனையடுத்து சில்வர் லேக் நிறுவனம் ஜியோவில் பங்கு மூலதனத்தை 2.08 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முகேஷ் அம்பானியின் அட்சயபாத்திரமாக மாறிய ஜியோ… ஆறே வாரத்தில் ஜியோ பங்கு விற்பனை வாயிலாக ரூ.92,202 கோடி திரட்டிய ரிலையன்ஸ்..

பேஸ்புக், சில்வர் லேக், விஸ்தா, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர். முபதாலா ஆகிய நிறுவனங்களுக்கு முகேஷ் அம்பானி ஜியோவின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து மொத்தம் ரூ.92,202.15 கோடி முதலீட்டை திரட்டி விட்டார். இதற்கிடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்த்தின் ரூ.53,124 கோடி மதிப்பிலான உரிமை பங்கு வெளியீடு வெற்றிகரமாக முடிவடைந்தது. உரிமை பங்கு வேண்டி 1.59 மடங்கு அதாவது சுமார் ரூ.84 ஆயிரம் கோடிக்கு உரிமை வேண்டி விண்ணப்பங்கள் வந்து இருந்தன. ஆக, முகேஷ் அம்பானி கடனை அடைக்க தேவையான நிதியில் பெரும்பகுதியை திரட்டி விட்டார். அதனால் விரைவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடன் இல்லா நிறுவனமாக மாறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.