விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 63 சவரன் நகை கொள்ளை

 

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 63 சவரன் நகை கொள்ளை

பேராவூரணி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 63 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த புனல்வாசல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி அருள்ராஜ் (52).

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 63 சவரன் நகை கொள்ளை

இவர் கடந்த திங்கட்கிழமை இரவு வழக்கம்போல தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறங்கியுள்ளார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து உள்ளே இருந்த 63 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 63 சவரன் நகை கொள்ளை

காலையில் எழுந்து பார்த்தபோது திருட்டு சம்பவம் நடைபெற்றதை அறிந்த அருள்ராஜ், இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்தில் நேரில் ஆய்வுமேற்கொண்ட பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், தஞ்சையில் இருந்து மோப்பநாய் “டப்பி” மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 63 சவரன் நகை கொள்ளை