“திமுக உடனான ஐ.யூ.எம்.எல். கூட்டணி தொடர்கிறது” – நவாஸ்கனி எம்.பி.,

 

“திமுக உடனான ஐ.யூ.எம்.எல். கூட்டணி தொடர்கிறது” – நவாஸ்கனி எம்.பி.,

திருவள்ளூர்

திமுக உடனான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கூட்டணி தொடரும் என்று அக்கட்சியின் துணை தலைவரும், எம்.பி-யுமான நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

“திமுக உடனான ஐ.யூ.எம்.எல். கூட்டணி தொடர்கிறது” – நவாஸ்கனி எம்.பி.,

திருவள்ளூரில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகளின் வெற்றிக்காக உழைக்கவும், ஸ்டாலின் தமிழக முதல்வராக அயராது பாடுபடுவோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தாலும், பாஜக தலைவர் முருகன் நாள்தோறும் கைதாகி விடுதலையாவது கண்துடைப்பாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.