‘தமிழகத்தில் 3 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

 

‘தமிழகத்தில் 3 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி, திண்டுக்கல், திருப்பூர் ,தென்காசி மாவட்டங்கள் ,தென் மாவட்டங்கள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை ,திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

‘தமிழகத்தில் 3 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

நாளை வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் புதுவை. காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

‘தமிழகத்தில் 3 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

அதேபோல் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

‘தமிழகத்தில் 3 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

இன்று முதல் 2 நாட்களுக்கு வரை கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் ,இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.