தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்!

 

தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்!

தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்!

இந்நிலையில் தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், புதுச்சேரி ,காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை நகர் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்!

நிவர், புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் முழுவதும் கனமழை பெய்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தான் வறண்ட வானிலை நிலவுகிறது. கடந்த வாரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காராணமாக ஒருசில இடங்களில் மழை பெய்த நிலையில் தற்போது மழை பொழிவு சற்று தணிந்துள்ளது. அதே சமயம் வடகிழக்கு பருவ மழைக்காலம் இன்னும் முடிவடையாததால் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்றைய அறிக்கையில் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த சூழலில் குளிரின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.