“3 வேட்பாளர்களில் ஒருவர்” அடம்பிடிக்கும் நடிகர் அர்ஜுன்; காத்திருக்கும் பாஜக!!

 

“3 வேட்பாளர்களில் ஒருவர்” அடம்பிடிக்கும் நடிகர் அர்ஜுன்; காத்திருக்கும் பாஜக!!

கடந்த மார்ச் 10ஆம் தேதி நடிகர் அர்ஜுன் பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசினார். தமிழக பாஜக தலைவர் எல். முருகன் ,தேர்தல் பொறுப்பாளர் கிருஷ்ணன் ரெட்டி உள்ளிட்டோரை நடிகர் அர்ஜுன் சென்னையில் சந்தித்து பேசினார், அப்போது அர்ஜுன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் ,அவர் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகின.

“3 வேட்பாளர்களில் ஒருவர்” அடம்பிடிக்கும் நடிகர் அர்ஜுன்; காத்திருக்கும் பாஜக!!

இந்த சூழலில் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்று தொகுதிகளுக்கு மட்டும் இன்னும் அறிவிக்காமல் உள்ளது. உதகமண்டலம் ,தளி, விளவங்கோடு
உள்ளிட்ட தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்பட்டியல் அறிவிக்கப்படாமல் உள்ளது .

“3 வேட்பாளர்களில் ஒருவர்” அடம்பிடிக்கும் நடிகர் அர்ஜுன்; காத்திருக்கும் பாஜக!!

இந்நிலையில் தளி தொகுதியில் பாஜக சார்பில் நரேந்திரன் மற்றும் நரசிம்மன் இடையே போட்டி நிலவி வரும் நிலையில் அங்கு நடிகர் அர்ஜுன் களம் காணலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அர்ஜுன் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு குறைவு என்றும் பாஜக நெருங்கிய வட்டாரத்தில் சிலர் கூறுகின்றனர்.

“3 வேட்பாளர்களில் ஒருவர்” அடம்பிடிக்கும் நடிகர் அர்ஜுன்; காத்திருக்கும் பாஜக!!

உதகமண்டலத்தை பொறுத்தவரையில் வேட்பாளர் அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .அங்கு நம்பிக்கையான வேட்பாளர் இல்லாததால் அங்கு இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் விளவங்கோடு தொகுதியில் இன்னும் ஒதுக்கப்படாததற்கு காரணம் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி என்றும் சொல்லப்படுகிறது . விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் அவர் பாஜகவுக்கும் தாவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அப்படி அவர் பாஜகவுக்கு வரும்போது அவருக்கு விளவங்கோடு தொகுதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.