ஐபிஎல்: 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

 

ஐபிஎல்: 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

ஐபிஎல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 46 ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, கில், ராணா ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பமே கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது, ராணா ரன்கள் எடுக்காமலும், திரிபாதி 7 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து மோர்கன் மற்றும் கில் ஜோடி சேர்ந்தனர். மோர்கன் 40, கில் 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்களை இழந்து 149 ரன்களை எடுத்தது.

ஐபிஎல்: 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

150 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கே.எல். ராகுல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். கெயில் மற்றும் ரந்தீப் சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்து கொல்கத்தா அணிக்கு டஃப் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். கெயில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 18.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்த பஞ்சாப் அணி, 150ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் முன் புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 4 ஆவது இடத்திற்கு முன்னேறி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியாகும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.