சொல்லி அடித்த வாட்சன், டூ பிளசிஸ்! ஃபார்முக்கு வந்தது சிஎஸ்கே!! அபார வெற்றி

 

சொல்லி அடித்த வாட்சன், டூ பிளசிஸ்! ஃபார்முக்கு வந்தது சிஎஸ்கே!! அபார வெற்றி

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் இன்றைய ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. சென்னை இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியது. அதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமேதான் வென்றது. அதுவும் பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் அணியோடு மோதிய ஆட்டத்தில்.

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியிலிருந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கே.எல் ராகுல் மற்றும் அகர்வாலும் களமிறங்கி அதிகபட்சமாக ராகுல் 63, நிக்கலஸ் பூரன் 33 ரன்களை எடுத்திருந்தனர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்திருந்தது.

சொல்லி அடித்த வாட்சன், டூ பிளசிஸ்! ஃபார்முக்கு வந்தது சிஎஸ்கே!! அபார வெற்றி

தொடர்ந்து சென்னை அணியிலிருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வாட்சனும், டூ பிளசிஸும் களத்தில் நின்று விளையாடினார். ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் அளவிற்கு வாட்சன் வெறித்தனமாக விளையாடினார். வாட்சன் 83, டூ பிளசஸ் 87 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பெற வைத்தனர். 17.4 ஓவரில் 181 ரன்கள் எடுத்து விக்கெட்டுகள் ஏதுமின்றி சென்னை அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்துள்ளது.