நீண்ட நாட்களுக்கு பின் வெற்றியை ருசித்த சென்னை அணி! 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 

நீண்ட நாட்களுக்கு பின் வெற்றியை ருசித்த சென்னை அணி! 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 29 ஆவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் சென்னை அணியில் தமிழக வீரர் ஜெகதீசன் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பியூஸ் சாவ்லா சேர்க்கப்பட்டார்.

நீண்ட நாட்களுக்கு பின் வெற்றியை ருசித்த சென்னை அணி! 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரன் மற்றும் பாப் டுபிளசிஸ் களமிறங்கினர். டுபிளசிஸ் டக் அவுட்டாக, அதிரடியாக ஆடிய சாம் கரன் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பேட்டிங் பவர் பிளே முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களாக இருந்தன. இந்த 2 விக்கெட்களையும் சந்தீப் சர்மா கைப்பற்றினார். அதன் பிறகு வந்த ஷேன் வாட்சன் மற்றும் ராயுடு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ராயுடு 41 ரன்களிலும் வாட்சன் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 167 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரவிந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 25 ரன்களுடன் இறுதிவரை களத்தில் நின்றார்.

Image

168 என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஜோடி களமிறங்கினர். வார்னர் 9 ரன்களிலும் பேர்ஸ்டோ 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். வில்லியம்சன் மட்டும் 57 ரன்கள் அடிக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்து இருந்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து அரையிறுதி கனவை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்த வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.