டாஸ் சென்ற சிஎஸ்கே! பந்துவீச்சை தேர்வு செய்தது!!

 

டாஸ் சென்ற சிஎஸ்கே! பந்துவீச்சை தேர்வு செய்தது!!

தோனி வெறியர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடந்த ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் போட்டி தொடங்கியது. 3 முறை ஐபிஎல் கோப்பையை தட்டி சென்ற சென்னை அணி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே வீரர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்.

Image

56 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்கிறது. நவம்பர் 3 வரை லீக் போட்டிகள் நடக்கும் நிலையில் அதற்கு பிறகு பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன. வ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், அரை இறுதிக்கு தகுதி பெறும், வார நாட்களில் ஒரு போட்டியும் சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட வார விடுமுறை நாட்களில் இரண்டு போட்டிகளும் நடக்கின்றன.

இந்நிலையில் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.