தமிழக வீரர் ஷாருக்கானுக்கு எகிறிய மவுசு… பஞ்சாப் ரூ.5.25 கோடிக்கு ஏலம்!

 

தமிழக வீரர் ஷாருக்கானுக்கு எகிறிய மவுசு… பஞ்சாப் ரூ.5.25 கோடிக்கு ஏலம்!

சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணிக்காக ஆடிவருபவர் ஷாருக்கான். இவர் கடந்த தொடரிலேயே சிறப்பாக விளையாடியும் ஐபிஎல் அணிகளின் பார்வையில் படவில்லை. இச்சூழலில் இந்த வருட தொடரில் பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். காலிறுதியில் தோற்றுவிடும் என்ற நிலையிலிருந்து தமிழ்நாடு அணியைத் தட்டித்தூக்கி வெற்றிபெற வைத்தார். அப்போதிருந்தே பெரிதும் பேசப்பட்டார்.

தமிழக வீரர் ஷாருக்கானுக்கு எகிறிய மவுசு… பஞ்சாப் ரூ.5.25 கோடிக்கு ஏலம்!

களத்தில் இறங்கியது முதலே அதிரடியாக விளையாடும் இவர் விக்கெட் விடாமல் ஃபினிஷிங் செய்வதைச் சிறப்பாகச் செய்கிறார். ஐபிஎல் போட்டிகளில் எப்போதும் ஃபினிஷிங் செய்யும் பவர் ஹிட்டர்களுக்கு மவுசு எகிறும். அதேபோல இன்றைய ஏலத்தில் ஷாருக்கானை எடுப்பதில் டெல்லியும் ஆர்சிபியும் கடுமையாகப் போட்டி போட்டனர். 5 கோடி இருக்கும்போது ஏலத்தில் நுழைந்த பஞ்சாப் அணி ரூ.5.25 கோடிக்கு ஷாருக்கானை வாங்கியது.