செப்டம்பரில் ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ திட்டம்!

 

செப்டம்பரில் ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ திட்டம்!

கொரோனா பரவலை மீறி கடந்த ஆண்டு துபாயில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடித்தியது. ஆனால் இந்த முறை இந்தியாவில் நடத்த முடிவெடுத்ததால், பிசிசிஐக்கு கடும் சவாகிவிட்டது. மார்ச் மாதம் வரை அமைதியாக இருந்த கொரோனா, ஐபிஎல் தொடங்கிய ஏப்ரல் மாதத்திலிருந்து வேகமெடுத்தது. வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

செப்டம்பரில் ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ திட்டம்!

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை வரும் செப்டம்பர் 3வது வாரத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்தியன் பிரீமியர் லீக் 2021 போட்டிகள், செப்டம்பர் 19 அல்லது செப்டம்பர் 20 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்றும், அக்டோபர் 10 ஆம் தேதி இறுதிப்போட்டிகள் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன