#IPL2021: பஞ்சாப்பை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதரபாத் அணி

 

#IPL2021: பஞ்சாப்பை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதரபாத் அணி

ஐபிஎல் தொடரின் 14வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே சொதப்பினர். ராகுல் 4 ரன்களிலும், அகர்வால் 22 ரன்களிலும், கெய்ல் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்களும் எதிர்பார்த்த அளவு அடிக்காததால் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

Image

121 என்ற எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது. வார்னர் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ இறுதி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் குவித்தார், வில்லியம்சன் தனது பங்குக்கு 16 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 18.4 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தொடரில் தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்த ஐதராபாத் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. தனது முதல் போட்டியில் வென்ற பஞ்சாப் அணி கடைசி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது