#IPL2021: 45 ரன்கள் வித்யாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை வெற்றி!

 

#IPL2021: 45 ரன்கள் வித்யாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை வெற்றி!

ஐபிஎல் தொடரின் 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் கெய்வாட் மற்றும் பாப் டு ப்ளஸிஸ்.
நிதானமாக ஆடிய கெய்வாட் 10 ரன்களிலும் அதிரடியாக ஆடிய டு ப்ளஸிஸ் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த மொயின் அலி 26 ரன்னிலும், ரெய்னா 18 ரன்னிலும்,ராயடு 27 ரன்னிலும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 18 ரன்னில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

Image

பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. துவக்க ஆட்டக்காரர் மனோன் வோரா 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.கேப்டன் சாம்சன் 1 ரன்னிலும் , பட்லர் 49 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.இதன் பின்னர் விக்கெட் சீட்டுக்கட்டு போல் வரிசையாக விழுந்தன. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 143 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 45 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.