போதைப்பொருள் பயன்படுத்தினாரா? நடிகை ஸ்ரத்தா கபூரிடம் அதிகாரிகள் விசாரணை!

 

போதைப்பொருள் பயன்படுத்தினாரா? நடிகை ஸ்ரத்தா கபூரிடம் அதிகாரிகள் விசாரணை!

நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் அம்பலமான போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக நடிகை ஸ்ரத்தா கபூரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி, சுஷாந்திற்கு போதைப்பொருள் வாங்கிக் கொடுத்ததாக அண்மையில் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் பயன்படுத்தினாரா? நடிகை ஸ்ரத்தா கபூரிடம் அதிகாரிகள் விசாரணை!

அவரிடம் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பாலிவுட்டில் நடிகை சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனிப்படையில் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

போதைப்பொருள் பயன்படுத்தினாரா? நடிகை ஸ்ரத்தா கபூரிடம் அதிகாரிகள் விசாரணை!

அதன் படி, நேற்று ஆஜரான ரகுல் ப்ரீத் சிங்கிடம் போதைப்பொருள் விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்த நிலையில், நடிகை ஸ்ரத்தா கபூர் போதைப்பொருள் தொடர்பான விசாரணைக்காக மும்பையில் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் ரியா சக்கரவர்த்தி தங்கள் பெயரை சுட்டிக் காட்டியதன் காரணம் என்ன? போதைப் பொருள் பயன்படுத்தினீர்களா? என அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நடிகை தீபிகா படுகோன் விசாரணைக்காக நேரில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.