டாஸ்மாக் கடைகளில் டோக்கன் முறை அறிமுகம்!

 

டாஸ்மாக் கடைகளில் டோக்கன் முறை அறிமுகம்!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் டாஸ்மாக் கடைகள், நாளை முதல் காலை 12 மணி முதல் இரவு 9 மணி வரையே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மது கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், டாஸ்மாக் கடைகளில், தனிமனித இடைவெளியை கடைபிடித்து, கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் டோக்கன் முறை அறிமுகம்!

இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மீண்டும் டோக்கன் முறையில் மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க நாளை முதல் மீண்டும் டோக்கன் முறையில் மதுபானங்கள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, மது வாங்க எந்த நேரத்தில் வரவேண்டும் என்பதை டோக்கனில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும், மாலை 4 மணிக்கு மேல் டாஸ்மாக்கில் டோக்கனை வழங்கக்கூடாது என்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அனைத்து மதுபான கடைகளுக்கும் சுற்றறிக்கை விட்டுள்ளார்