‘சதம் போச்சே’ சுந்தர்… ‘தவுசன் வாலா’ பண்ட் – இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசம்!

 

‘சதம் போச்சே’ சுந்தர்… ‘தவுசன் வாலா’ பண்ட் – இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசம்!

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையேயான நான்காவது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டி இங்கிலாந்தை விட இந்தியாவுக்கே அதிக முக்கியவத்துவம் வாய்ந்தது. இப்போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்ய வேண்டும். அப்போது தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியுஸிலாந்துடன் இந்தியா மோத முடியும்.

‘சதம் போச்சே’ சுந்தர்… ‘தவுசன் வாலா’ பண்ட் – இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசம்!

இரண்டாவது போட்டியைத் தவிர்த்து அனைத்திலும் டாஸில் கோலி தோற்றுவிட்டார். இதிலும் தோற்றார். டாஸில் வெற்றிபெற்ற ரூட் பேட்டிங்கை தேர்வுசெய்தார். இந்த முறையாவது ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் என எதிர்பார்த்த இங்கிலாந்து வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கம் போலவே சுழல் புயல் ஆடுகளத்தில் வீச ஆரம்பித்துவிட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிப்லேவையும் கிராலியையும் அடுத்தடுத்து அக்சர் காலி செய்தார். எல்பிடபிள்யூவில் ரூட்டை நடையைக் கட்டவைத்தார் சிராஜ்.

Image

ஸ்டோக்ஸும் பெயர்ஸ்டோவும் கொஞ்சம் படம் காட்டினாலும், அவ்ளோ சீன் இல்லை என சொல்லி பெயர்ஸ்டோவை காலி செய்து அனுப்பினார். பென் ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்து சுந்தரிடம் வீழ்ந்தார். அதுவரையில் விக்கெட் கணக்கைத் தொடங்காத அஸ்வின் ஓலி போப்பையும் போக்ஸையும் அடுத்தடுத்து தூக்கி அதிர்ச்சி கொடுத்தார். 46 ரன்களில் லாரன்ஸை பண்ட் ஸ்டம்பிங் செய்ய, பெஸ்ஸை அக்சர் வெளியில் அனுப்பிவைத்தார். முடிவில் ஜாக் லீச்சை அஸ்வின் தூக்க இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 205 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

Image

இந்திய அணி பேட்டிங்குக்கு ஆரம்பமே அதிர்ச்சியைக் கொடுத்தார் சுப்மன் கில். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்தியாவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. புஜாரா 17 ரன்களில் வெளியேற கோலி டக்அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இந்த முறை இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய வீரர்களுக்குச் சோதனையளித்தனர். சோதனைகளைச் சாதனையாக மாற்றுவதே இந்திய இளம்படையின் டிரேட்மார்க். பண்டும் சுந்தரும் அதலபாதாளத்தில் இருந்த இந்தியாவை மீட்டு நல்ல நிலைக்குக் கொண்டுவந்தனர்.

Image

அரைசதம் அடிக்கும் வரை திரி கொளுத்தாத பட்டாசாக இருந்த பண்ட், அதற்குப் பின் தவுசன் வாலாவாக வெடிக்க ஆரம்பித்துவிட்டார். சிக்ஸ் அடித்த சதமடித்த சரவெடி அடுத்த நொடியே அவுட்டாகியது. ஆனால் அப்போது இந்தியா கரை சேர்ந்திருந்தது. அதன்பின் சுந்தருடன் கைகோர்த்தார் அக்சர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களை நோகடித்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை ஏதோ ஒரு பார்ட்னர்ஷிப் நிற்கும். அது எந்த பார்ட்னர்ஷிப் என்று யாருக்கும் தெரியாது. அதுதான் இந்தியாவின் ஸ்பெஷாலிட்டி.

Image

அக்சரும் சுந்தரும் நிதானமாக ஆடிவந்த நிலையில், ரன்அவுட்டால் வந்தது வினை. அக்சர் 43 ரன்களில் வெளியேற, அடுத்த ஒரு ரன்களைக் கூட அடிக்காமல் சுந்தரிடம் ஸ்டிரைக்கையும் கொடுக்காமல் அடுத்தடுத்து இஷாந்தும் சிராஜும் வீழ்ந்தனர். இதனால் சுந்தர் 96 ரன்கள் அடித்து சதத்தை நழுவவிடவைக்கப்பட்டார். இறுதியில், 365 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்டானது. இதன்மூலம் 160 ரன்கள் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. தற்போது இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்துள்ளது.