நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு! என்னது நான் அறிவித்தேனா?- அர்ஜூன் சம்பத்

 

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு! என்னது நான் அறிவித்தேனா?- அர்ஜூன் சம்பத்

நடிகர் சூர்யா மீது செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசாக தருகிறேன் என நான் கூறவில்லை என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு குறித்து, நடிகர் சூர்யா, சமீபத்தில் காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நீட் தேர்வை மனுநீதி தேர்வு என்று சூர்யா குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்ததாகவும், என்னை அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுகு வழங்க தயார் என அர்ஜுன் சம்பத்துக்கு நடிகர் சூர்யா பதிலளிப்பது போலவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிவந்தது.

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு! என்னது நான் அறிவித்தேனா?- அர்ஜூன் சம்பத்

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அர்ஜூன் சம்பத், இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நடிகர் சூர்யா மீது செருப்பால் அடித்தால் பணம் தருவதாக என் படம் போட்டு பொய் பிரச்சாரம் நடக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே நேற்று முன் தினம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நீதிமன்றம் உத்தரவை மீறி நீட் தேர்வை பற்றி பேசிய நடிகர் சூர்யாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளார் தர்மா, நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றார். தர்மாவின் இந்த பேச்சே அர்ஜூன் சம்பத் பேசியதாக திரித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.