டிராவில் முடிந்த பரபரப்பான போட்டி – ஹைதராபாத் Vs ஜாம்ஷெட்பூர் #ISL

 

டிராவில் முடிந்த பரபரப்பான போட்டி – ஹைதராபாத் Vs ஜாம்ஷெட்பூர் #ISL

ISL கால்பந்து திருவிழாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு கோவாவின் திலக் மைதானத்தில் ஹைதராபாத் Vs ஜாம்ஷெட்பூர் அணிகளுக்குமான போட்டி நடந்தது.

நேற்றைய நிலவரப்படி, ஹைதராபாத் அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாண்டு, ஒன்றில் வென்றும், ஒன்றை ட்ரவாக்கியும் 4 புள்ளிகளோடு ஐந்தாம் இடத்தில் பாயிண்ட் டேபிளில் தன்னைத் தக்க வைத்துக்கொண்டிருந்தது.

டிராவில் முடிந்த பரபரப்பான போட்டி – ஹைதராபாத் Vs ஜாம்ஷெட்பூர் #ISL

ஜாம்ஷெட்பூர் அணியோ இரண்டு போட்டிகளில் விளையாடு ஒன்றில் தோற்றும், ஒன்றை ட்ராவாக்கியும் ஒன்பதாம் இடத்தில் இருந்தது.

இரண்டு அணிகளுக்கும் இன்றைய வெற்றி மிக அவசியம் என்றாலும், ஜாம்ஷெட்பூர் பாயிண்ட் டேபிளில் முன்னேற நேற்று வென்றாக வேண்டும் என்று விளையாடியது.

போட்டி தொடங்கிய 50 நிமிடத்தில் ஹைதராபாத்தின் நட்சதிர வீரர், ஸ்பெயினைச் சேர்ந்த 33 வயதான Aridane Santana அட்டகாசமான கோல் அடித்தார். இதனால், ஹைதராபாத் அணிக்கான வெற்றி வாய்ப்பு உருவானது.

டிராவில் முடிந்த பரபரப்பான போட்டி – ஹைதராபாத் Vs ஜாம்ஷெட்பூர் #ISL

அதன்பின், ஹைதராபாத் தடுப்பு ஆட்டமே ஆடி, ஜாம்ஜெட்பூர் அணியைக் கோல் போட விடாமல் தீவிரமாக ஆடியது. ஆனால், ஆட்டத்தின் 85 நிமிடத்தில் நைஜிரிய வீரரும், ஜாம்ஷெட்பூர் அணியின் முக்கிய வீரருமான Stephen Eze கோல் அடித்தார். இதனால், ஆட்டம் இன்னும் தீவிரமானது.

ஆட்டம் இறுதி நிமிடம் வரை இரு அணிகளும் இரண்டாம் கோல் போடாததால் போட்டி டிராவில் முடிவடைந்தது.