சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரிப்பு – ரயில்வே

 

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரிப்பு – ரயில்வே

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ரயில்களில் அதிகமாக பயணிகள், பயணிப்பார்கள் என்பதால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்தே  3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே கடந்த மாதம் 14 ஆம் தேதிக்கு முன்னர் முன்பதிவு செய்தவர்களின் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து விரைவு, பயணிகள் மற்றும் புறநகர் ரயில் பயணங்களுக்கான முன்பதிவுகள் ரத்து செய்யப்படுகிறது என்றும்  பெறப்பட்ட முன்பணம் அனைத்தும் பயணிகளின் கணக்குகளுக்கு திருப்பி செலுத்தப்படும் என்றும் ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரிப்பு – ரயில்வே

இந்நிலையில் ஜூன் 1-ந் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருந்தார். இதனிடையே இந்த 200 ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவும் நிறைவடைந்தது. ஜூன் 1 முதல் இயக்கப்படும் ரயில்கள் பட்டியலில் தமிழகத்துக்கான ரயில்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.