காஷ்மீர்: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் பலி!

 

காஷ்மீர்: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் பலி!

காஷ்மீர்: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் பலி!
காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஓருவர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர் உயிர்த்தியாகம் செய்தார்.

காஷ்மீர்: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் பலி!இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃபிடினென்ட் கலோனல் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், “ரஜோரி மாவட்டம் நவ்ஷோரா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஹவில்தார் சம்பூர் குர்ரங் படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்” என்றார்.

காஷ்மீர்: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் பலி!
எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் வெற்று முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. தினமும் இப்படி உயிரிழப்புகள் தொடர்வதை தடுக்க எந்த உறுதியான நடவடிக்கையும் இல்லை என்பது வேதனையாக உள்ளது.