ஹைதராபாத்தில் சிறுத்தையை கெத்தாக எதிர்த்து நின்ற நாய்கள் கூட்டம்

 

ஹைதராபாத்தில் சிறுத்தையை கெத்தாக எதிர்த்து நின்ற நாய்கள் கூட்டம்

தெருவில் சுற்றித் திரிந்த சிறுத்தையை நாய்கள் கூட்டம் எதிர்த்து நின்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்: தெருவில் சுற்றித் திரிந்த சிறுத்தையை நாய்கள் கூட்டம் எதிர்த்து நின்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தின் ராஜேந்திரா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக சாதாரணமாக தெருக்களில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுகிறது. மைலர்தேவ்பள்ளி பகுதியில் சாலையில் சிறுத்தை ஒன்று காயமடைந்த சிறுத்தை ஒன்று சாலையிலேயே கடந்த சில தினங்களுக்கு முன்பு உட்கார்ந்து இருந்தது.

இந்நிலையில், தற்போது அதே ராஜேந்திரா நகர் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்த இன்னொரு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மதில் சுவரைத் தாண்டி குதித்த சிறுத்தை லாரியில் ஏற முயற்சிக்கும் நபரின் காலை கடிக்க முயன்றது.

பின்னர் அங்கிருந்த கடையின் ஷட்டரை பிறாண்டி அதன் மீது ஏற முயற்சித்தது. அதற்குள் அந்த தெருவில் இருந்த ஐந்து நாய்கள் கொண்ட கூட்டம் சிறுத்தைக்கு அருகில் தைரியமாக வந்தன. அவைகளை கர்ஜித்து சிறுத்தை விரட்ட முயற்சித்தது. ஆனாலும் நாய்கள் விடாமல் சிறுத்தைக்கு அருகில் சென்று குரைத்தன. இந்த வீடியோ அம்மாநிலத்தில் சமூக வலைதளங்களில் மக்களிடையே வைரலாகி வருகிறது.