வெளியேற வேண்டாம்… மோடியிடம் வேண்டும் நெட்டிசன்கள்
சமூக ஊடகங்களை விட்டு வெளியேற யோசிக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறிய நிலையில் வேண்டாம் சார் என்று நெட்டிசன்கள் ட்வீட் செய்து அதை டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.
சமூக ஊடகங்களை விட்டு வெளியேற யோசிக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறிய நிலையில் வேண்டாம் சார் என்று நெட்டிசன்கள் ட்வீட் செய்து அதை டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.
பிரதமர் மோடி நேற்று இரவு, “கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறலாமா என்று யோசித்து வருகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
This Sunday, thinking of giving up my social media accounts on Facebook, Twitter, Instagram & YouTube. Will keep you all posted.
— Narendra Modi (@narendramodi) March 2, 2020
இதுதான் நீங்க நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் செய்யும் நல்லது என்று தமிழகத்தில் பலரும் மோடியை கிண்டல் செய்து ட்வீட் வெளியிட,வட இந்தியாவிலோ மோடி வெளியேறக் கூடாது என்று ட்வீட் செய்து வருகின்றனர். #NoSir என்ற ஹேஷ் டேக் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. அதேபோல், மோடி இல்லை என்றால், சமூக ஊடகத்தை பயன்படுத்த மாட்டோம் என்ற வகையில் #NoModiNoTwitter என்பது உள்ளிட்ட பல்வேறு ஹேஷ் டேக்குகள் உருவாக்கப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறன.