விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலையே அதிகம்!
இந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் வேலையில்லாமல் உயிரிழந்தவர்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் சுயதொழில் செய்பவர்கள் 13,149 பேரும், வேலையில்லாதவர்கள் 12,936 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் வேலையில்லாதவர்கள் 35 பேரும், சுய தொழில் செய்வோர் தொழில் ஏற்படும் விரக்தியால் 36 பேரும் தற்கொலை செய்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் விவசாயிகள் 10,349 பேர், வேலை கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் 12 ,936 பேர் என்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் மஹாராஷ்ட்ரா முதலிடமும், தமிழகம் இரண்டாமிடமும், மேற்குவங்கம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.