‘மனைவி வீட்டில் இல்லை; நீ வந்து சமைத்து கொடு’ : காலேஜ் வார்டனின் லீலைகள்!
மேலும் பிறந்த நாளன்று எனக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்பியதுடன், எனது மனைவி வீட்டில் இல்லை.
உத்ரகாண்ட்டின் பாட்னாநகரில் உள்ள ஜிபி பந்த் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள ஒருவர் அங்குள்ள ஹாஸ்டல் விடுதியிலும் வார்டனாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பல்கலைக் கழக ஒழுங்கு கமிட்டியிடம் மாணவி ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அதில், பேராசிரியரும், வார்டனுமான அந்த நபர் இரவில் போன் செய்து தொந்தரவு செய்து வருகிறார். மேலும் பிறந்த நாளன்று எனக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்பியதுடன், எனது மனைவி வீட்டில் இல்லை. யார் சமையல் செய்வது? இரவு வீட்டுக்கு வந்து நீதான் சமையல் செய்து தரவேண்டும் என்று மெசேஜ் அனுப்பியதாகவும் கூறியுள்ளார். மேலும், போன் செய்து அதையே கூறியதாகவும், போனை கட் செய்தால் தொடர்ந்து போன் செய்து தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அம்மாநில ஆளுநர் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.