பீகாரில் அதிர்ச்சி: மனைவி, மனைவியின் தங்கையை சுட்டு கொன்று தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்!

 

பீகாரில் அதிர்ச்சி: மனைவி, மனைவியின் தங்கையை சுட்டு கொன்று தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்!

பீகாரில் மனைவி, சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட மனைவியின் தங்கையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ராணுவ வீரர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் மனைவி, சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட மனைவியின் தங்கையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ராணுவ வீரர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

shoot

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாக விடுப்பில் வீடு வந்திருந்தார். காய்ச்சல் சரியானாலும் அவருக்கு உடல்நிலை முன்புபோல இல்லை. மனநிலையிலும் தடுமாற்றம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருடைய மனைவியின் தங்கைக்குத் திருமணம் முடிந்துள்ளது. மனைவி, மச்சினிச்சி, மகன்களுடன் காரில் எங்கோ சென்றுள்ளார் அவர்.
திடீரென்று காரை நிறுத்திவிட்டு மகன்களை வெளியே நிற்கச் சொல்லியுள்ளார். பிறகு துப்பாக்கியை எடுத்து மச்சினிச்சையை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பிறகு மனைவியை சுட்டுள்ளார். சித்தியை சுட்டுக் கொல்லும்போதே அவருடைய மகன் போலீசாரைத் தொடர்புகொண்டு விவரத்தை கூறியுள்ளான். மின்னல் வேகத்தில் மனைவியின் தங்கையை சுட்டுவிட்டு, தானும் சுட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார்.

suicide

ஏன் சுட்டார், குடும்ப பிரச்னை ஏதும் இருந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், குஜராத்தில் பணியாற்றிவந்த அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது இருந்து தன்னை யாரோ துரத்துகிறார்கள், கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று அவர் வித்தியாசமாக பேசி வந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை அடிக்கடி பாட்னாவுக்கு அழைத்துச் சென்றுவந்துள்ளனர். மனநிலை தடுமாற்றம் காரணமாக அவர் இவ்வாறு செய்திருக்கலாம்” என்று கூறுகின்றனர்.