நித்தியானந்தாவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ்: குஜராத் போலீசார் முடிவு!
இதுவொருபுறமிருக்கத் தனிநாடு அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் நித்தியானந்தா ஈடுபட்டு வருகிறார்.
ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்களில் சிக்கியுள்ள நித்தியானந்தா எங்கு உள்ளார் என்பது தான் ஒரே கேள்வியாக உள்ளது. இதுவொருபுறமிருக்கத் தனிநாடு அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் நித்தியானந்தா ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்தக்கோரும் புளூ கார்னர் நோட்டீஸை நித்தியானந்தாவுக்கு வழங்க வேண்டும் என அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பொதுவாக சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போல் 8 வகையான நிறங்களில் நோட்டீஸ் பிறப்பிக்கும். அதில் நோட்டீஸ் அளிக்கப்பட்ட நபர் எந்த நாட்டில் இருந்தாலும் அவரை கண்டுபிடித்து உரிய நாட்டிடம் ஒப்படைக்கும் பொறுப்பு இண்டர்போல் அதிகாரிகளைச் சேரும். அதனால் நித்தியானந்தாவைப் பிடிக்க அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இது தொடர்பாக அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் , மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்களில் சிக்கியுள்ள நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே புளூ கார்னர் நோட்டீஸ் அளிக்கச் சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலிடம் அனுமதி பெற்றுத் தருமாறும் கேட்டுள்ளனர்.