தாயை கத்தியால் குத்திக்கொன்று விட்டு அந்தமானில் காதலருடன் பதுங்கிய மகள்…வெளியான பரபரப்பு தகவல்கள்!

 

தாயை கத்தியால் குத்திக்கொன்று விட்டு அந்தமானில் காதலருடன் பதுங்கிய மகள்…வெளியான பரபரப்பு தகவல்கள்!

முதற்கட்ட விசாரணையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில்,  அம்ருதா ஒரு வாலிபருடன் தனது வீட்டில் இருந்து ஒரு பையுடன் மோட்டார் சைக்கிளில்  சென்றது தெரியவந்தது

பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அக்‌ஷய்நகர் 9-வது கிராசில் வசித்து வந்தவர் நிர்மலா. இவருக்கு அம்ருதா என்ற மகளும் ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். அம்ருதா கம்ப்யூட்டர் இன்ஜினியராக  உள்ளார். 

ttn

இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில்  அம்ருதா, தூங்கி கொண்டிருந்த தனது தாய் நிர்மலாவை சரமாரியாக கத்தியால்  குத்தியுள்ளார். சத்தம்கேட்டு சம்பவ இடத்துக்கு வந்த ஹரிஷையும் குத்திவிட்டு தப்பித்துள்ளார். இதில் நிர்மலா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ஹரிஷ் ஆபத்தான முறையில்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்ருதாவை தேடி வந்தனர்.  முதற்கட்ட விசாரணையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில்,  அம்ருதா ஒரு வாலிபருடன் தனது வீட்டில் இருந்து ஒரு பையுடன் மோட்டார் சைக்கிளில்  சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதன் பதிவு எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அவர்கள் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் அந்தமானுக்கு  தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

ttn

இதை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்தமான்-நிக்கோபார் தீவில் உள்ள போர்ட்பிளேயரில் ஒரு தங்கும் விடுதியில் அம்ருதா மற்றும் அவரது காதலர் ஸ்ரீதர் ராவை கைதுசெய்தனர். இதுகுறித்து கூறும் போலீசார் தரப்போ, அம்ருதா 15 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனால் தாய் மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அம்ருதாவின் காதலர் ஸ்ரீதர் ராவை நிர்மலாவுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் நிர்மலாவை கொலை செய்ய திட்டமிட்டு இருவரும் கொலை செய்து விட்டு தப்பித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்ருதா மற்றும் ஸ்ரீதர் ராவை போலீசார் பெங்களூர் அழைத்து வர திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.