தவறாக நடக்க முயன்ற இருவரை அடித்து உதைத்த இளம்பெண்: அதிர்ச்சி தரும் சம்பவம்!
Nov 17, 2018, 13:04 IST1542440044000
தனியாக சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இருவரை அப்பெண் சரமாரியாக அடித்து உதைத்த காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம்: தனியாக சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இருவரை அப்பெண் சரமாரியாக அடித்து உதைத்த காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா அருகே, பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார்.அப்போது அப்பகுதியில் வந்த இருவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதனால் அவர்களை தாக்கிய அப்பெண், ஊர்மக்களின் உதவியுடன் அவர்கள் இருவரையும் சிறைபிடித்து கட்டிப் போட்டார்.
பின்பு அந்த பெண் சரமாரியாக அவர்களைத் தாக்கினார். அங்கிருந்தவர்களும் அந்த இருவரை அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாக்கப்பட்ட இருவரையும் மீட்டு கைது செய்தது குறிப்பிடத்தக்கது.