டெல்லி உட்பட வடமாநிலங்களில் திடீர் நிலநடுக்கம்
டெல்லி, ஸ்ரீ நகர், சண்டிகர், மதுரா உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
டெல்லி, ஸ்ரீ நகர், சண்டிகர், மதுரா உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் அளவுகோளில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் டெல்லியில் ஏற்பட்டது. வட மாநிலங்களின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH An earthquake with a magnitude of 6.3 on the Richter scale hit Hindu Kush region in Afghanistan. Earthquake tremors also felt in Pakistan’s Islamabad and Lahore. pic.twitter.com/npNxkVHYiT
— ANI (@ANI) December 20, 2019
டெல்லி என்சிஆர், ஹிந்துகுஷ் பகுதியில் மட்டும் நில அதிர்வு ரிக்டர் அளவில் 6.8 ஆகவும், நொய்டா, காஜியாபாத், க்ரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளில் 5.9 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது.