டிக் டாக் வீடியோவால் சஸ்பெண்ட் ஆன பெண் போலீஸுக்கு குவியும் பட வாய்ப்பு!
இப்படி நடந்துகொள்ளலாமா என்று பலரும் திட்டி தீர்த்தனர்.
இதையடுத்து பெண் காவலர் அல்பிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள லங்நாஜ் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் அல்பிதா சவுத்ரி டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து போலீஸ் அதிகாரியே இப்படி நடந்துகொள்ளலாமா என்று பலரும் திட்டி தீர்த்தனர்.
இதையடுத்து பெண் காவலர் அல்பிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் நொந்துபோன அவர் குஜராத் நடிகருடன் இணைந்து நடித்து ‘ TikTok ni deewani ‘ என்ற தலைப்பில் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். அதோடு இரண்டு பாடல்களை சொந்தமாகப் பாடி வீடியோக்களை வெளியிட்டார்.
मेहसाणा के लांघनज पुलिस स्टेशन की महिला कॉन्स्टेबल अर्पिता चौधरी फिर विवादों में। पुलिस स्टेशन के अंदर ही बनाया वीडीयो– @tiktok_us ऐप पर शेयर किया। विवाद सामने आने के बाद #TikTok से डिलीट किया। @indiatvnews @IndiaTVHindi @dgpgujarat @PradipsinhGuj pic.twitter.com/Vt57KnwAzD
— Nirnay Kapoor (@nirnaykapoor) July 24, 2019
இந்நிலையில் பெண் காவலர் அல்பிதா சவுத்ரிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது. இதனிடையே அவர் காடி போலீஸ் ஸ்டேஷனில் பணியமர்த்தப்பட்டார். அவர் வெளியில் செல்லும் போது அவருடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். இதனால் உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கினால் தான் சினிமாவில் நடிப்பேன் என்று பெண் காவலர் அல்பிதா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.