சூரத்தில் தனிமை வார்டில் இருந்து தப்பிய 50 வயது நோயாளி மருத்துவமனை வளாகத்தில் மரணம்

 

சூரத்தில் தனிமை வார்டில் இருந்து தப்பிய 50 வயது நோயாளி மருத்துவமனை வளாகத்தில் மரணம்

சூரத்தில் தனிமை வார்டில் இருந்து தப்பிய 50 வயது நோயாளி மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்தார்.

சூரத்: சூரத்தில் தனிமை வார்டில் இருந்து தப்பிய 50 வயது நோயாளி மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்தார்.

சூரத் மருத்துவமனையின் தனிமை வார்டில் இருந்து செவ்வாய்க்கிழமை தப்பி ஓடிய ஒரு கொரோனா வைரஸ் நேர்மறை நோயாளி மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்தார். அந்த நோயாளி பகவன் ராணா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஏப்ரல் 21 அன்று புதிய சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ராணா இறந்துவிட்டதாக மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்கள் கூறினர். அந்த நோயாளியின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

மன் தர்வாஜாவில் வசிக்கும் நோயாளி கடந்த செவ்வாய்க்கிழமை தனது கொரோனா வார்டில் இருந்து தப்பினார். பிரேத பரிசோதனை கூடம் அருகே கடந்த புதன்கிழமை ராணாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

surat

ஆரம்பத்தில், மருத்துவமனை ஊழியர்கள் உடலை அடையாளம் காணத் தவறிவிட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடையாளம் காணப்பட்ட பின்னர் அந்த உடல் காணாமல் போன கொரோனா வைரஸ் நோயாளி பக்வா ராணா என்பது உறுதி செய்யப்பட்டது.

ராணா காணாமல் போன பிறகு என்.சி.எச் ஊழியர்களும் காணாமல் போன அறிக்கையை போலீசில் தாக்கல் செய்திருந்தனர். பின்னர் காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வளாகத்தின் சி.சி.டி.வி காட்சிகளை சரிபார்த்தனர். ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து ராணா எவ்வாறு தப்பித்தார் என்பதை அறிய முடியவில்லை.

அடையாளம் தெரியாத உடல் குறித்து மருத்துவமனை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. போலீசார் சரிபார்ப்பிற்குப் பிறகு காணாமல் போன கொரோனா நோயாளியின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுஎன்று அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி NCH அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராணாவின் தகனத்திற்குப் பிறகு அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனை கூடத்திற்கு அருகிலுள்ள பகுதியை மருத்துவமனை ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.