காஷ்மீரில் நடப்பது என்ன..?நடந்தது என்ன..?

 

காஷ்மீரில் நடப்பது என்ன..?நடந்தது என்ன..?

கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி 370 சட்டப்பிரிவு விலக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் நடந்தவை குறித்து மத்திய் அரசு சில புள்ளி விபரங்களை வெள்யிட்டு இருக்கிறது. கல்வீச்சு,கைது,எல்.ஓ.சி முதல் ஆப்பிள் வணிகம் வரை அந்தப் புள்ளிவிபரங்களில் தரப்பட்ட்ள்ளது.

ஆகஸ்ட் 4ம் தேதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர்கள் 5161 பேர்.இவர்களில் 609 பேர் இப்போதும் சிறையில் இருக்கிறார்கள்.அவர்களில் 218 பேர் கல்வீச்சில் ஈடுபட்டவர்கள்.

கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி 370 சட்டப்பிரிவு விலக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் நடந்தவை குறித்து மத்திய் அரசு சில புள்ளி விபரங்களை வெள்யிட்டு இருக்கிறது. கல்வீச்சு,கைது,எல்.ஓ.சி முதல் ஆப்பிள் வணிகம் வரை அந்தப் புள்ளிவிபரங்களில் தரப்பட்ட்ள்ளது.

kashmir

ஆகஸ்ட் 4ம் தேதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர்கள் 5161 பேர்.இவர்களில் 609 பேர் இப்போதும் சிறையில் இருக்கிறார்கள்.அவர்களில் 218 பேர் கல்வீச்சில் ஈடுபட்டவர்கள்.ஆகஸ்ட் 15 முதல் நவம்பர் 15 வரை 190 கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.இது தொடர்பாக கைதானோர் எண்ணிக்கை 765.பாக்கிஸ்தான் ரானுவம் 950 முறை  எல்லை தாண்டி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது.

army

தற்போது நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் , மொத்தமுள்ள 50,537 மாணவர்களில் 50,219 பேர் சரியான நேரத்துக்கு தேர்வுகளில் கலந்து கொண்டனர். அதாவது 99.5 சதவீதம் .

exam

கடந்த ஆறுமாதத்தில் காஷ்மீருக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 34 லட்சத்தி 10219 பேர்.இதில் வெளிநாட்டவர் 12,934 பேர். இதன் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் 25 கோடி.

காஷ்மீர் மாநில சேம்பர்- ஆஃப் காமர்ஸ் சந்தித்த நஷ்டம் 10 ஆயிரம் கோடி ரூபாய்.இதில் பெரும்பங்கு இழப்புக்குக் காரணம் இண்டர் நெட் வசிதி துண்டிக்கபட்டதே என்று தெரிவிக்கப் பட்டுள்ளது

mobile

இந்த ஆறுமாத கால மொத்த ஆப்பிள் விளைச்சல் 8960 டன்.இதே விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் அரசே கொள்முதல் செய்த வகையில் 38 கோடிரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கடைசியில் காஷ்மீர் என்கிற அழகான மாநிலத்தின் மக்கள்,மரங்கள், விருந்தினர்கள் எல்லாம் வெறும் எண்களாகிப் போன சோகத்தையும் இந்த அறிக்கை,மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.