கள்ளக்காதலி வீட்டில் இருந்த கணவரை கையும் களவுமாக போலீசில் பிடித்து கொடுத்த மனைவி!
கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலியையும் பெண் ஒருவர் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலியையும் பெண் ஒருவர் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் கொட்ட கொம்மு கூடம் பகுதியை சேர்ந்தவர் லஷ்மன். இவருக்கும் சுஜன்யா என்பவருக்கும் 2 ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து லஷ்மனுக்கு கூக்கட்பள்ளியில் உள்ள அனுஷா என்கிற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சுஜன்யா லஷ்மனிடம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் கள்ளக்காதலி அனுஷா வீட்டுக்கு சென்ற லஷ்மன் மீண்டும் வீடு திரும்பாமல் அனுஷாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதனால் வேதனையடைந்த சுஜன்யா, லஷ்மனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கும் லஷ்மனிடம் இருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுஜன்யா, கணவரின் கள்ளக்காதலியான அனுஷா வீட்டுக்கு சென்று கணவன் மற்றும் அனுஷாவை பிடித்து வெளுத்து வாங்கியுள்ளார். தொடர்ந்து போலீசிடம் அவர்களை கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து லஷ்மன் மீது முதல் மனைவி இருக்கும் போதே வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தது, விவாகரத்து நோட்டீஸுக்கு பதில் கூறாமல் இருந்தது உள்ள குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவரை நினைத்து அழுது கொண்டிருக்காமல், அதிரடியாகக் களத்தில் இறங்கி போலீசில் பிடித்து கொடுத்த சுஜன்யாவை அங்குள்ளவர்கள் பாராட்டி வருகின்றனர்.