ஒருவேளை மகளை காதலிப்பானோ? சிறுவனை கொலை செய்த தந்தை கைது!
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கினார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் பள்ளி சிறுவன் டாரோன் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கினார்.
இது தொடர்பாக விசாரணையில் மோர்வாஹி கிராமத்தில் வசிக்கும் சேவக்ரம் மணிராம் குருபேலே என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 10ஆம் வகுப்பு படிக்கும் டாரோன் தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தான். அப்போது மணிராம் குருபேலே சிறுவனை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று வயலில் வைத்து சுத்தியலால் சிறுவனை அடித்து கொலை செய்துள்ளார். இதற்கு காரணம் தனது மகளை அந்த சிறுவன் காதலிப்பதாக மணிராம் குருபேலே எண்ணி இந்த கொலையை செய்துள்ளார்.
ஆனால் போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும் காதலிக்கவே இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.