எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு அவலம் நடக்கக்கூடாது… கதறி அழும் பிரியங்காவின் அம்மா!
தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி. இவர் கொல்லப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். தினமும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுவந்த பிரியங்கா, நேற்றுமாலை பணிமுடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில் அவரின் இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. இதனை சாதகமாக எடுத்துக்கொண்ட மர்ம நபர்கள் சிலர் அந்த பெண்ணை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து தீயிட்டு எரித்தனர். இந்த சம்பவம் தெலங்கானா மட்டுமின்றி தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிரியங்கா ரெட்டியின் இறுதி ஊர்வலத்தில் அவரது அம்மா கதறி அழுத காட்சிகள் நெஞ்சை உருகுகின்றனது.
Family members of 27-year-old veterinary doctor Priyanka Reddy break down during last rights of her dead body at purana pool grave yard in #Hyderabad on Thursday. Priyanka went missing on Wednesday night and her charred body was found in Shamshabad today. pic.twitter.com/B6Wo21o37f
— Mohd Lateef Babla (@lateefbabla) November 29, 2019
பிரியங்காவின் இறுதி ஊர்வலகத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்ட நிலையில், அவரது உடல் பூரணபுல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே பிரியங்காவின் அம்மா அமர்ந்து, எனது மகளுக்கு ஏற்பட்ட கொடுமை வேறொருவருக்கும் வரக்கூடாது என சொல்லிக்கொண்டே அழும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.