ஊருக்குள் நுழைந்த புலி.. 3 பேரை கடித்ததால் பீதியில் கிராம மக்கள்: வைரல் வீடியோ!

 

ஊருக்குள் நுழைந்த புலி.. 3 பேரை கடித்ததால் பீதியில் கிராம மக்கள்: வைரல் வீடியோ!

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிஃட் மாவட்டத்தில் உள்ள கஜ்ராலா என்னும் இடத்தினுள் நேற்று காலை புலி ஒன்று நுழைந்துள்ளது. அந்த புலியை பார்த்த பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். அதன் பின்னர், ஊருக்குள் நுழைந்த அந்த புலி ஒரே நாளில் உஜாகர் சிங் மற்றும் லால்டா பிரசாத் என்ற மூன்று பேரை தாக்கியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ttn

இதனை பற்றி பேசிய ஒரு விவசாயி, ஊருக்குள் நுழைந்த அந்த புலி என் வீட்டின் அருகே இருந்தது. அந்த வழியே சென்ற 3 பேரை தாக்கியுள்ளது. புலி ஊருக்குள் வந்தது குறித்து வனத்துறையினருக்கு உடனே தகவல் கொடுத்ததும் அவர்கள் 4 மணி நேரத்துக்கு பிறகு தான் வந்தார்கள் என்று கூறியிருக்கிறார். 

புலியை பிடிக்க வனத்துறையினர் வந்தவுடன் பொதுமக்கள் அனைவரும் அவர்களுடன் சென்றுள்ளனர். கூட்டத்தை கண்டு அலறிய அந்த புலி, டிராக்டர் மீது ஏறி தாவிக் கொண்டு பிடிக்க வருபவர்களை தாக்க முயன்றுள்ளது. இதனையடுத்து அந்த புலி, டிராக்டரில் இருந்து கீழே குதித்து காட்டுக்குள் தப்பி ஓடியிருக்கிறது. ஊருக்குள் நுழைந்த அந்த புலி, மீண்டும் மக்கள் யாரையும் தாக்காமல் இருக்க வனத்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.